கலைஞர் கைவினை திட்டம் 2025 - பிணையில்லா தொழில் கடன் மற்றும் மானியம்
கலைஞர் கைவினை திட்டத்தில் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
கலைஞர் கைவினை திட்டத்தில் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்குடன், ‘கலைஞர் கைவினை திட்டம்’ மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை பிணையில்லா கடன் மற்றும் ரூ.50,000 வரை மானியம் பெற முடியும்.
தகுதியும் விதிமுறைகளும் (Eligibility)
- தமிழ்நாட்டைச் சேர்ந்த குடிமக்கள்
- 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
- கைவினை அல்லது பாரம்பரிய தொழில்களில் ஆர்வம் மற்றும் அனுபவம் இருக்க வேண்டும்
வயது வரம்பு (Age Group)
விண்ணப்பதாரர் குறைந்தது 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
பயன்கள் (Benefits)
- பிணையில்லா கடன் — ரூ.3,00,000 வரை
- அரசு மானியம் — ரூ.50,000 வரை
தகுதியான தொழில்கள் (Eligible Trades)
தையல், கட்டிட வேலை, மர வேலைபாடுகள், ஜவுளி அச்சிடுதல், தோல் பொருட்கள், காலணிகள், மீன்வலை, நகை, சிகை அலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், கலை வேலைபாடுகள், பூட்டு, கூடை, கயிறு பாய், மண்பாண்டம், பொம்மைகள், படகு கட்டுதல், துணி தேய்த்தல், சிற்ப வேலை, கற்சிலை, ஓவியம், பழங்குடியினர் இயற்கை சேகரிப்பு, கண்ணாடி வேலை, இசைக்கருவி, உலோகப் பொருட்கள், பாசிமணி, மூங்கில், பிரம்பு, சணல், பனை பொருட்கள் உள்ளிட்ட தொழில்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
தற்போது நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் கலந்து கொண்டு,
மாவட்ட தொழில் மையம் அலுவலர்களை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
தகவல்:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Comments
Post a Comment