Total Views

Latest News

Pensions for former Athletes - முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

திட்டம் பற்றிய விவரம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அரசு விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்ற, தற்போது நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையவர்கள் (Eligibility)

  • தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்கள்
  • தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்றவர்கள்
  • மத்திய அரசு நடத்தும் பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் பங்கேற்றவர்கள்
  • இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகரித்த போட்டிகளில் பங்கேற்றவர்கள்

வயது வரம்பு (Age Criteria)

விண்ணப்பதாரர் கடந்த ஏப்ரல் மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

வேறு நிபந்தனைகள்

  • தமிழகத்தை சேர்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்த போட்டிகளில் பங்கேற்றவராகவும் இருக்க வேண்டும்.
  • மாத வருமானம் ரூ.6,000க்குள் இருக்க வேண்டும்.
  • மத்திய/மாநில அரசின் ஓய்வூதியம் பெறும் நபர்கள் தகுதி இல்லை.
  • முதியோர்களுக்கான விளையாட்டு வெற்றி பெற்றோர் தகுதி இல்லை.

நன்மைகள் (Benefits)

தகுதி உள்ள முன்னாள் வீரர்கள் அரசு வழங்கும் ஓய்வூதியம் பெறலாம். இது அவர்களது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள உதவும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

  • https://sdat.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம்
  • திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

  • விளையாட்டு சாதனைகளுக்கான சான்றுகள்
  • வயது மற்றும் அடையாள சான்றுகள்
  • பிறப்புச் சான்று
  • வருமான சான்று
  • ஓய்வு பெற்றதற்கான விவரங்கள்

முடிவுத் தேதி

அடுத்த மாதம் 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

Comments