கொரோனா நோய்த்தொற்று உலக அளவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதில் முக்கியமாக இந்தியா போன்று மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் மிக அதிவேகமாக பரவி வரும் நிலையில் கொரானா தொற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் அதற்கான படுக்கை வசதிகள் மிகக்குறைவாக இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
😷மத்திய மாநில அரசுகள் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் படுக்கை வசதிகள் குறைவாக இருப்பதன் காரணத்தினால் நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.
😷பல தன்னார்வ நிறுவனங்கள் அமைப்புகள் OXYGEN தயாரித்து இலவசமாகவோ அல்லது குறைந்த அளவில் வாடகைக்கும் வழங்கி வருகின்றனர் இந்நேரத்தில் அவர்களை நாம் பாராட்டியாக வேண்டும்.
உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும் சிலர் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து பணம் பார்க்கின்றனர்.
உயிரோடு விளையாடும் நேரமா இது..?
இதுபோன்று உயிரிழப்புக்களை தவிர்க்கவும் படுக்கை வசதி உள்ள மருத்துவமனைகளை கண்டறிந்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசின் தொழில்நுட்ப பிரிவு தனியாக ஒரு இணைய தளத்தை உருவாக்கி அதன் மூலம் மக்கள் படுக்கை வசதிகளை மற்றும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் உங்கள் பெயர் முகவரி நோய்தொற்று பற்றிய விவரங்கள் கேட்கப்படும் அதன் அடிப்படையில் உங்களுக்கு தகவல் கொடுக்கப்படும். கேட்கப்படும் கேள்விகளுக்கான இங்கு உள்ளது. பார்த்து பயனடையவும்.
இந்த பயனுள்ள தகவலை நீங்கள் உங்கள் உறவினர்களுக்கும் அனைவருக்கும், உங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் அதிகம் பகிர்ந்து இதில் பயன் அடைய உதவி செய்யுங்கள்.
இதோ உங்களுக்கான லிங்க்..
For bed requests, the patient's family can fill in these details. The UCC (Unified Command Center - War Room) will contact them immediately
Comments
Post a Comment